பல்லவி
குவலய த3ள நயன ப்3ரோவவே
குந்த3 1குட்3மல ரத3ன
சரணம்
சரணம் 1
மமத மிஞ்சி நீது3 பைனி
மருலு கொன்ன நேனெந்து3 போது3 (கு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
குவலய/ த3ள/ நயன/ ப்3ரோவவே/
குவளை/ இதழ்/ கண்ணா/ காப்பாயய்யா/
குந்த3/ குட்3மல/ ரத3ன/
முல்லை/ மொட்டு/ பல்லோனே/
சரணம்
சரணம் 1
மமத/ மிஞ்சி/ நீது3/ பைனி/
பாசம்/ மிகுந்து/ உந்தன்/ மீது/
மருலு/ கொன்ன/ நேனு/-எந்து3/ போது3/ (கு)
காதல்/ கொண்ட/ நான்/ எங்கு/ போவேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - குட்3மல - குட்மல : இரண்டு சொற்களுக்கும் சரியாகும்.
2 - தலசி நே கரகி3 - தலசுசு கரகி3.
5 - க்4ரு2ண ஹீனுட3னுசு (கருணையற்றவன் என) - கு3ண ஹீனுட3னுசு (பண்பற்றவன் என) : பாடலின் மற்ற சரணங்களில் கூறப்பட்டவற்றினை நோக்குகையில், 'க்4ரு2ண ஹீனுட3னுசு' அதிகம் பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - மரசி மரவனட்லு - மறந்தும் மறவாது : முரண்பாடான நடவடிக்கைகள்.
4 - அன்ய மதமுலு - பொதுவாக, தியாகராஜர், 'மதம்' என்ற சொல்லினால், ஆறு விதமான கடவுளர்களின் வழிபாட்டு முறையினை (சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, முருகன், சூரியன்) குறிப்பிடுவது வழக்கம். இவ்விடத்தில், அடுத்து வரும் 'பஜனை மட்டும் செய்திருந்தேன்' என்ற சொற்களினால், அப்படிப்பட்ட, 'ஆறு வழிபாட்டு முறை' என பொருள் கொள்ளவியலாது. ஏனெனில், 'பஜனை நெறி' அந்த ஆறு முறைகளுக்குமே பொதுவானது. எனவே, இங்கு 'மற்ற மதம்' என்ற சொல்லினால், பக்தி நெறியன்றி, மற்ற, 'கரும', 'ஞான நெறி'களினைக் குறிப்பதாகக் கொள்ளப்படும்.
5 - க்4ரு2ண ஹீனுட3னுசு - கருணையற்றவனென - புத்தகங்களில் இதற்கு, 'என்னைக் கைவிட்டால் உனக்கு இழுக்கு நேராதோ?' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், சரணத்தின் கடைசியில் வரும், 'அனி' (என) என்ற சொல்லினால், 'கருணையற்றவனென உனக்கு இழுக்கு வருமென, உலகத்தினை நான் துறந்தேன்' என்றுதான் பொருள் கொள்ளமுடியும்.
கலி - கலி யுகம்
தேவ சிரோமணி - தேவரில் தலைசிறந்தவன்
Top